Sunday, September 2, 2012

தன்னம்பிக்கை-3



நான் படித்ததில் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்.


தன்னம்பிக்கை

அருவியின் தன்னம்பிக்கை விழுகையில்!

ஆமையின் தன்னம்பிக்கை பொறுமையில்!

இளமையின் தன்னம்பிக்கை துடிப்பில்!

ஈட்டியின் தன்னம்பிக்கை ஏறிகையில்!

உளியின் தன்னம்பிக்கை சிலையில்!

ஊமையின் தன்னம்பிக்கை மெளனத்தில்!

எண்ணத்தின் தன்னம்பிக்கை செயலில்!

ஏட்டின் தன்னம்பிக்கை எழுத்தில்!

ஐயத்தின் தன்னம்பிக்கை தெளிவில்!

ஒளியின் தன்னம்பிக்கை இருட்டில்!

ஓசையின் தன்னம்பிக்கை சுரத்தில்!

ஔவையின் தன்னம்பிக்கை வாய்மையில்!

மனிதா ! உன் தன்னம்பிக்கை எதில்?  

Friday, August 31, 2012

தன்னம்பிக்கை-2


என்னுடைய முதல் விருது.


 
  
அருமை நண்பரே திரு சீனி அவர்கள் எனக்கு பகிர்ந்த விருது.

மனமார்ந்த நன்றிகள் நண்பரே.

-********-

நான் படித்ததில் ரசித்த கவிதை ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்..

                                                                         தன்னம்பிக்கை - 2
                           
                               தன்னம்பிக்கை
                               என்னும் விதை விதைத்து
                               முயற்சி                                                     
                               என்னும் நீர் ஊற்றினால் தான்
                               வெற்றி
                               என்னும் கனி பறிக்க முடியும்!


Monday, August 20, 2012

ஏணிப்படி


இது நான் சமீபத்தில் படித்தது. இதை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

  ஏணிப்படி


                                தொடும்
                                                                        தூரம் தொலைவில்லை !
                                                                        துவண்டு
                                                                        போனால் முடிவதிற்கில்லை !
                                                                    
                                                                        தோல்விகள் ஒன்றும்
                                                                        நிரந்தரம் அல்ல !
                                                                        வெற்றிகள் என்றும்
                                                                        நிலையானது அல்ல !   

                                                                       முயற்சிக்கு என்றும்
                                                                       தோல்வி இல்லை!
                                                                       வெற்றியே என்றும்
                                                                       முயற்சியின் எல்லை!

                                                                       முடியும் என்றால்
                                                                       தொடு  வானம்!
                                                                       முடியாது என்றால்
                                                                       அதுவே நெடு  வானம்!

                                                                       பறவை  கூட
                                                                       முயன்றால்  தான்
                                                                       சிறகை  விரிக்க  முடியும்!
                    
                                                                       மனிதர் கூட
                                                                       முயன்றால்  தான்
                                                                       வாழ்வில்  வெல்ல  முடியும்!

                                                                       வெற்றியே வானம்
                                                                       அதை அடைய
                                                   முயற்சியே ஏணிப்படி!





Tuesday, August 14, 2012

தன்னம்பிக்கை


66வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நண்பர்களே.

இது நான் சமீபத்தில் படித்தது. இதை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

தன்னம்பிக்கை

சோதனை முறையில்

சாதனை படைப்போம்

இளைஞனே

தன்னம்பிக்கை என்ற

ஒன்றை மூலதனமாக்கினால்

இந்த தரணி எல்லாம்

கழனிகள் ஆகிவிடும்

காலம் கடந்தாலும்

நம் கடமை தவறாமல்

மண்ணின் மகத்துவம்

காப்போம்

உன் தோள்கள்

வலிமையானது – நீ

ஜெயிப்பவர்களின் மத்தியில்

ஜெயித்தவன் – நீ

பொங்கி எழும் அனல்

சுனாமி - உன்

கோபத்திற்கு அது பினாமி

சூறாவளியும்

உன் பார்வையால்

சுருண்டு விடும்

இளைஞனே

இன்றே புறப்படு

இமயத்தையும் குமரியையும்

ஒன்றாய் இணைத்திடு!

Monday, July 16, 2012

நம்பிக்கை...

மரம்
         உதிர்ந்தால் தான் வசந்தம்!

சூரியன்
         மறைந்தால் தான் விடியல்!

நிலவு
         தேய்ந்தால் தான் பவுர்ணமி!

மேகம்
         கருத்தால் தான் மழை!

தோல்வி
         இருந்தால் தான் வெற்றி!

நம்பிக்கை
        இருந்தால் தான் வாழ்க்கை!!!!

இது கடந்தவாரத்தில் நான் படித்ததில் பிடித்த ஒன்றாகும்.

Wednesday, July 11, 2012

வணக்கம்

வருகை தந்த அனைவருக்கும், வணக்கம். இது ஒரு நீண்ட நாளை கனவு. இன்று தான் விடிவு பெற்றுள்ளது.